இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலை வீரன்

படம்
  இளைஞன் ரொலிலாலாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது இன மக்களை சொந்த இடத்திலிருந்து வெளியேற்றும் சட்டத்துக்கெதிராக அவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை தழுவிய பேரணி காவல்துறையினரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தது. மேலும், ரொலிலாலாவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவனுக்கு விடுதலை கிட்டினாலும் அகிம்சை மீது அவன் கொண்டிருந்த அசராத நம்பிக்கை தற்போது தளர்ந்துவிட்டிருந்தது. கியூபப் புரட்சித் தலைவர் பிடல் காசுட்ரோவின் யூலை 26 இயக்கத்தின் வெற்றிகள் அவன் சார்ந்த குழுவினரை ஆயுதப் போராட்டம் பால் ஈர்க்கச் செய்தது. கெரில்லாப் போர்முறையில் நாட்டம் கொண்ட ரொலிலாலா, மார்க்சியப் போராளிகளான மாவோ மற்றும் சே குவேரா ஆகியோரால் எழுதப்பட்ட கெரில்லாப் போர் முறை பற்றிய நூல்களை வாசித்து தனது போராளிக் குழுவின் தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதில் ஈடுபட்டான். அவனது குழு நாட்டின் இராணுவ மையங்கள், மின் நிலையங்கள், தொலைபேசி நிலையங்கள் போன்ற பொதுமக்களின் உயிரிழப்பு இல்லாத ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் மூலம் தனது அரசு நிறவெறிக் கொள்

ஒக்டோபர் புரட்சி

படம்
  அது ஒரு மழைக்கால இரவுப் பொழுது. 1917ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 25ம் திகதி, ருசியாவின் புனித. பீற்றர்சுபேர்க் நகரத் தெருக்கள் வழியே ஒரு மக்கள்திரள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ருசியாவின் குளிர்கால அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற பாரிய மக்கள் எழுச்சியின் மூலம் கொடுங்கோலாட்சி செலுத்தி வந்த சார் மன்னனின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து உருவான இடைக்கால அரசாங்கம் புனித . பீற்றர் சு பேர்க்கின் குளிர்கால அரண்மனையை அதன் தலைமைப் பீடமாகத் தேர்ந்தெடுத்திருந்தது. சாரின் ஆட்சியின் கீழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்திருந்தனர். எங்கும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. நாட்டின் பெரும்பாலான நிலங்கள் மக்கள்தொகையில் இரண்டு வீதமேயான பிரபுக்களின் கைகளில் இருந்தது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அடிமைகள் போல் உழைத்தனர். ஆனால், சார் இரண்டாம் நிக்கலா சு இவற்றைக் கருத்திலெடுக்காது தனது படைகளை முதல் உலகப்போரில் ஈடுபடுத்தியிருந்தான். போரின் காரணமாக ருசி யப் பொருளாதாரம் மேலும் பலவீனமடைந்தது. மக்கள் பாணுக்காக கூட்டுறவுக் கடைகளில் வரிசையில் நின்றனர்.

யாழ்ப்பாணப் பொது நூலகம்

  ஒரு அறிவார்ந்த சமூகத்தின் குறியீட்டுப் பொருளாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இச் சமயத்தில் நூலகத்தின் வரலாற்றை மீட்டிப்பார்த்தல் பொருத்தமானதே. யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட வேளையில் 97000க்கும் அதிகமான நூல்களை உள்ளடக்கியிருந்தது. அதுமட்டுமன்றி, ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் மற்றும் ஏனைய கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கிய பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் அது கொண்டிருந்தது. அத்தோடு, எரியூட்டப்படும் வேளையில், ஆசியாவிலேயே பெரிய நூலகங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரியூட்டப்பட்ட செய்தி அறிந்து மொழியியல் வல்லுனரான தாவீது அடிகளாரும் தம்முயிரை நீத்தமை மேலுமொரு பேரிழப்பாயமைந்தது. யாழ்ப்பாணத்துக்கென ஒரு பொது நூலகத்தின் தேவை 1933ல் K. M. செல்லப்பா எனும் தனி மனிதரின் எண்ணத்தில் உருவானது. இவர் தன்னுடைய வீட்டில் நடத்தி வந்த சிறு நூல்நிலையத்தை விரிவாக்கும் எண்ணத்தில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். இவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, இலங்கை முழுவதிலுமுள்ள தமிழர்கள் பொருளுதவி அளித்ததோடு, தேவையான நூல

ஆயிரம் கொக்குகளின் கதை

படம்
  சிறுமி சதகோ சசாகிக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். சப்பானின் இரோசிமா நகரில் அவளது குடும்பம் வசித்து வந்தது. 1945ம் ஆண்டு ஆகத்து 6ம் திகதி அமெரிக்கப் போர்விமானமான, எனோலா கே தனது நாட்டு விஞ்ஞானிகளால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த குண்டை இரோசிமா மீது வீசுகிறது. குண்டின் சக்தி 2 கிமீக்கு அப்பால் உள்ள சதகோவின் வீட்டையும் தாக்குகிறது. குண்டின் அதிர்ச்சியால் வீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டாள் சதகோ. ஆனால், அவளுக்குப் பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவளது பெற்றோர் அவளைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றனர். 1955 அளவில் சதகோ சசாகி சதகோ வளர்ந்ததும் அவளைப் பாடசாலையில் சேர்க்கின்றனர் அவளது பெற்றோர். பாடசாலையில் திறமைகாட்டிய சதகோ, தனது பாடசாலையின் அஞ்சலோட்ட அணியிலும் இடம்பிடித்தாள். 1954 நவம்பர் மாதமளவில் சதகோவின் கழுத்து மற்றும் காதின் பின்னால் வீக்கம் ஏற்பட்டது. மேலும் கால்களிலும் ஊதா நிறப் பொட்டுக்கள் உருவாயின. பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெற்றோருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. சதகோவுக்கு குருதிப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக அவள் மருத்த