உயரப் பறக்கும் ஃபீனிக்சுப் பறவை
ஆகத்து 9, 1945 நேரம் காலை 11.00 மணி, ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் பொக்சார் விமானம் தனது தாக்குதல் இலக்கை துல்லியமாகக் கணித்து அணுகுண்டை வீசுகிறது. சில நிமிடங்களில் நாகசாகி நகரை காளான் குடை புகை மூட்டம் சூழ்கிறது. அணுகுண்டின் கதிர்வீச்சு 70,000 பேரைப் பலி கொள்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இரோசிமாவில் வீசப்பட்ட 'சின்னப் பையன்' 140,000 பேரைக் காவு வாங்கியிருந்தான். இழப்பின் கோரம் கண்டு சப்பானியப் பேரரசர் இறோகித்தோ நிபந்தனையற்ற சரணடைதலுக்கு உடன்பட்டார். அணுகுண்டு வீச்சின் பின்னர் இரோசிமாவிலும் நாகசாகியிலும் உருவான காளான் முகில்கள் உலகப்போர் ச ப்பானின் 40%மான தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகளை நிர்மூலமாக்கியிருந்தது. ச ப்பானின் உற்பத்தித்திறன் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. சாம்பல் மேடுகளாயிருந்த தொழிற்சாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியிருந்தது. எவ்வாறாயினும் ச ப்பானிய மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முனைப்பைக் கொண்டிருந்தனர். புதிய பொருளாதாரத் திட்டங்கள் வரையப்பட்டன. போர் நிறைவடைந்ததால் மில்லியன் கணக்கான போர்வீரர்கள் வேறு வேலை தேடுமுகம...